திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் திறலோங்கு செல்வம்ஓங்கச் செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம் திகழ்ந்தோங்க அருள்கொடுத்து மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க வளர்கருணை மயம்ஓங்கிஓர் வரம்ஓங்கு தௌ;அமுத வயம்ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கிஞான உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில் ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும் உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க உய்கின்ற நாள்எந்தநாள் தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே